தமிழீழத் தேசிய மாவீரர் வார தொடக்க நிகழ்வு 2022

தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்! மேலும் ..

பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2022

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். இந்த வருடம் ஆலய குருக்கள் இல்லாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடல்களை பாடியும் பஜனைகளைப் பாடியும் தேவிகளை வணங்கினார்கள் நவராத்திரி பற்றிய பேச்சினை வளர்தமிழ் 2 மாணவன் மேலும் ..

கடந்த 10 வருடங்களில் மாணவர்களின் செயலாற்று புள்ளி விபரங்கள்

பாடசாலை சமுதாய உறவை வலுப்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும், கற்றல் பேறுகளையும் பிள்ளைகளின் கற்றலில் பாடசாலையிலும், வீட்டிலும், குடும்பத்தினர் காட்டும் ஈடுபாடானது, அவர்களின் பாடசாலைத் தரங்கள், மற்றும் பரீட்சைப் புள்ளிகளை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் பாடசாலைக்கு ஒழுங்காக வருதல், சமூகதிறன்களை வளர்த்தல், பட்டப்படிப்புக்குச் செல்லும் வீதத்தை அதிகரித்தல் அத்துடன் இடை நிலைக் கல்விக்கு அப்பாலும் கல்வியைத் தொடருதல் மேலும் ..

தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பரிசளிப்பு விழா – 2022

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 27-03-2022, ஞாயிற்றுக்கிழமையன்று கரோ லெசர் சென்ரர் பைரன் மண்டபத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது. விழா காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 10,000இற்;கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். தமிழர் கல்வி மேம்பாட்டு மேலும் ..

மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்குச் செல்வோம்

#கலை வகுப்புகள் மற்றும் #மழலையர் நிலை வகுப்புகள் மாத்திரம் இப்போதைக்கு நேரடியாக ஆரம்பிக்கும். அடுத்து வரும் மாதத்தில் இருந்து மற்ற வகுப்புகளும் பாடசாலையில் ஆரம்பிக்கும் முற்கூட்டிய அறிவித்தலின் பின்பு. #tamil

அரையாண்டு பொதுத் தேர்வு 2022

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2022 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் தங்களை அணியம் செய்து கொள்வதற்காக ஏற்கனவே அனைத்து கடந்த கால தேர்வு வினாத்தாள்களும் பாடசாலை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இதனை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பிரதி எடுத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரையாண்டுத் மேலும் ..

அரையாண்டு பொதுத் தேர்வு 2021

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அனைத்துலக அரையாண்டு பொதுத் தேர்வு 2021 வழமை போல பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். பிரித்தானிய அரச மற்றும் பாடசாலையின் கொரோனா விதிகளை அனைவரும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் நடாத்தப்படும் அரையாண்டுத் தேர்வு 2021 வழமை போல பாடசாலை மண்டபத்தில் வகுப்பு ரீதியாக நடைபெறும். மாணவர்கள் மேலும் ..

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை. கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன? புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி மேலும் ..

கற்கை நெறி

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் சிறார்களுக்காக தமிழ்ப் பாடசாலைகளில் நடைபெறும் அனைத்துலக மற்றும் அரையாண்டு வினாத்தாள்களை மாணவர்களின் நலன் கருதி எங்கள் தளத்தில் இணைத்துள்ளோம். வளர்தமிழ் 1-12 வகுப்பிற்கான வினாத்தாள்கள் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையால் தயாரிக்கப்பட்டு அவர்களாலேயே தேர்வும் நடாத்தப்பட்டு மாணவர்களின் மதிப்பீடுகள் கொடுக்கப்படுகின்றன. மழலையர் நிலை மற்றும் பாலர்நிலைக்கான வினாத்தாள்கள் எங்கள் பாடசாலை மேலும் ..

தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

 < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21> ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக இளமைக்காலத்தில் பேசத் தொடங்கிய மொழி என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது. தாய்மொழி என்பது ஒரு மொழியாகவே தொன்மை முதல் கருதப்பட்டு வந்தாலும் பன்மொழிகள் பேசும் பல்கலாச்சார குடும்பப் பின்னணியில் வளரும் மேலும் ..

‘தேசத்தின் இளஞ்சுடர்’ – செல்வி திக்சிகா

‘தேசத்தின் இளஞ்சுடர்’ இலண்டன் மாநகரில் வசித்து வந்த செல்வி திக்சிகா பாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இளந்தளிரான இவரின் தோற்றமும், கம்பீரமும், துணிச்சலும், ஆளுமை மிகுந்த திறனும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட கொடைகள். இவற்றை எல்லாம் பல வழிகளில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்.