இன்று எங்களது பள்ளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எங்களது பள்ளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும் இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குமாறு நாமும் இத் தருணத்தில் புலத்தில் வாழும் அனைத்து உறவுகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.